அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

Default Image

மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் துவக்கிவைத்தனர். இதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்றும் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்