கொரோனா தீவிரம்! 540 படுக்கைகள் தயார்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!

Default Image

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேட்டியளித்தார்.   

அவர் பேசுகையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தனியார்  மருத்துவமனைகளிலும் 100 படுக்கைக்கு மேல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும்,  தேவையான வெண்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  என்றும்,

தனியார் பொறியியல் கல்லூரியில் தனி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கோவை வந்துள்ள 314 பயணிகளின் வீடுகளும் தனிமைப்படத்தப்பட்டுள்ளது. அதற்கான அடையாள ஸ்டிக்கரும் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் தினமும் தொலைபேசி மூலம் உடல்நலம் பற்றியும் ,  ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்பது பற்றியும் கேட்டறிந்து வருவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்