மகேந்திரன் உயிரிழந்த வழக்கு: “காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை.. மாரடைப்பால்லே உயிரிழந்தார்!”- சிபிசிஐடி

Default Image

சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சிபிசிஐடி தெரிவித்தனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் மகேந்திரன் உயிரிழந்த வழக்கை தமிழக அரசு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. அந்த வலக்கை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது சிபிசிஐடி காவலர்கள் தரப்பில், சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்