மதுரை மேம்பால விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்…!

Default Image

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள நத்தம் சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார். பின் விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த மேம்பாலத்தின் ஒவ்வொரு பிரிவும் 70 டன் எடை கொண்டது என கூறப்பட்டது. உயிரிழந்த நபர் 42 வயதான உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மேம்பாலம் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை திருச்சி என்ஐடி  குழுவினரால் மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்