இன்றே கடைசி.. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு.! காரணம் என்ன.?

group 2 exam

டி.என்.பி.எஸ்.சி : குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்கள் என மொத்தம்  2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று [ஜூலை-19] கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

காரணம் என்ன?

மைக்ரோசாப்ட்தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்