அவதூறு கருத்து பரப்பிய கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Default Image

சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பரப்பிய கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கிஷோர் கே சுவாமி சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர். இவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பெண்களை பற்றியும், முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரை, முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை பற்றியும் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இவரை குண்டர் சட்டத்தில் ஜூன் 26 ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து இவருக்கு ஜாமீன் கோரி தாம்பரத்தில் இருக்கும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த ஜாமீன் மனுவை விசாரித்த தாம்பரம் நீதிபதிகள், பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை பரப்பிய காரணத்தால் கிஷோர் கே சுவாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்