பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது -ராமதாஸ்

Default Image
  • பெண்கள் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர் என்று  மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத் கூறினார்.
  • பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா அமைச்சர் நிதித் ராவுத்  அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில்,  மாநிலத்தில் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்கின்றனர்.எனவே மாதவிடாய் காலமான 4 நாட்களுக்கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இந்த மாதிரியான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.


இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், மராட்டியத்தில் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க கரும்பு வெட்டும் பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இத்தகைய கொடுமைகளை தடுக்க பெண் தொழிலாளர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Marcus Stoinis
Vidamuyarchi Online Review
gold price
Thiruvannamalai TVK District secretary issue
Rohit sharma
Sri Lanka vs Australia, 2nd Test