சுதந்திர தின விழா ஒத்திகை;சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!

Default Image

சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து  மாற்றப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தின விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து  மாற்றப்பட்டுள்ளது.அதன்படி,காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

அதன்படி,நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை,போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்லும் வகையிலும்,அதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்கசாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மேலும்,அண்ணாசாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாகவும்,முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்