ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்த வருண் சிங் இல்லை என்ற செய்தி கேட்டு சோகமடைந்தேன் – முதல்வர்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் இல்லை என்ற செய்தி கேட்டு சோகமடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Deeply disturbed on hearing the sad news that Group Captain Varun Singh, the lone survivor of the tragic helicopter crash near Coonoor, is no more. His valour and commitment shall serve as inspiration for all and he will be living in our minds forever. pic.twitter.com/YBTVNVcEf4
— M.K.Stalin (@mkstalin) December 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025