பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு.,

Default Image

திருச்சி: ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராம ஊராட்சி, கடியாக்குறிச்சி கிராமத்தில், கலெக்டர் ராஜாமணி பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை  வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் புகையில்லா கிராமங்களாக திகழ வேண்டும் என்று மத்திய அரசு கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. புகையில்லா எரிவாயு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில் நமது நாட்டில்  அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை படிப்பதற்கு அனுப்பமாட்டார்கள். இன்று மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதற்கட்டமாக ரூ.1600 மதிப்பிலான எரிவாயு அடுப்பு, ஒரு சிலிண்டர், ஒரு ரெகுலேட்டர், ஒரு டியூப் இலவசமாக வழங்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்