4 தொகுதி இடைத்தேர்தல் : 11 மணி வரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம்

Default Image

தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.சூலூர் – 31.55%, அரவக்குறிச்சி – 34.89%, திருப்பரங்குன்றம் – 30.02%, ஒட்டப்பிடாரம் – 30.28% வாக்குகள் பதிவாகியுள்ளது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 11 மணி நிலவரப்படி 32.22% வாக்குகள் பதிவாகியுள்ளது.556 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்