தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

DSP Transfer: நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகளை இந்திய தேர்தல் ஆணையமும்,   மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு

shankar jiwal

DSP Transfer: நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகளை இந்திய தேர்தல் ஆணையமும்,   மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

READ MORE-வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் நாள் தென் மாநில தேர்தல் அதிகாரி உடன்  ஆலோசனை நடத்தினார். 2-வது நாள்   காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  வருகின்ற நாடாளுமன்ற  தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

READ MORE-ககன்யான் திட்டம்.. இந்திய வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர்..!

இதற்கிடையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அதிகாரிகள் தேர்தலுக்கு முன்னதாகப் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 17 டி.எஸ்.பி. நிலை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.