மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் இடம் ஒதுக்க கோரி வழக்கு தள்ளுபடி

Default Image

7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது  கோரிய வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல்  இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.இன்று அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.

இதனிடையே 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த தனது மகளுக்கு 7.5 % இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று அறிவழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது  ,7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது எனக்கூறி  வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கே 7.5 % இட ஒதுக்கீடு என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்