கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு – அமைச்சர் அன்பழகன்

Minister Anbalagan said that a decision on the opening of the college for first year college students will be taken in 2 days.

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகள், டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்டது. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றும் பல்கலைகழக துணைவேந்தர்கள் பணி நீட்டிப்பு தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசிடம் ஆலோசனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.