டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!

Default Image

பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடந்த நிலையில், வகுப்புகள் தொடங்கவில்லை.

பொறியியல் வகுப்புகள் தொடங்காத நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஐஐடி, என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளதாகவும், அதன்பின் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்