இவர்களுக்கு டிசி தாமதமின்றி வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை
பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்றும், 5,8, 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றிடிசி வழங்க வேண்டும். அதே சமயம் இதர வகுப்பு மாணவர்கள் டிசி கேட்டாலும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை புதிதாக சேர வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.