அதிகரிக்கும் கொரோனா.. தெருக்களை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

corona spread in TN is increasing day by day, the Corporation Commissioner has ordered to close the streets inhabited by corona victims in Madurai

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசித்து வரும் தெருக்களை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தடுப்பு நடவடிக்கைக்கான தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.