கொரோனா அறிகுறி -15 வயது சிறுவன் டிஸ்சார்ஜ்

Default Image

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியவரை பரவியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 50 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுவனுக்கு  கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சிறுவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்