“தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை!”- அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 5,800 முதல் 6,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக 4 ஆம் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இன்று கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மாவட்டத்திற்கு ஒரு சித்தா மையம் திறந்து வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்