அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Default Image

அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில்  தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இந்த நிலையில் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, இந்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு, மேலும் பல சாதனைகள் புரிந்து பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்