சுபஸ்ரீ தொடர்பான வழக்கு ! அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

சுபஸ்ரீ வழக்கில் ஒட்டுமொத்த விசாரணையை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கினை  இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில்,  உதவி ஆணையர்கள் விசாரணையை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும்  ஒட்டுமொத்த விசாரணையை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது .இந்த விவகாரத்தில் ஜெயகோபாலை கைது செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.இறுதியாக ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து  அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்