#Breaking: மதுரை – சென்னை செல்லும் பேருந்துகள் பகல் 12 மணியுடன் நிறுத்தம்!

The departure of the government bus from Madurai to Chennai will be stopped from tomorrow till 12 noon.

மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்படுவது, நாளை முதல் பகல் 12 மணி வரை நிறுத்தப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இரவு ஊரடங்கு காரணமாக அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் பகலில் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி, இரவு 8 மணிக்குள் பேருந்துகள் சென்றடையும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து புறப்படுவது, நாளை முதல் பகல் 12 மணி வரை நிறுத்தப்படும் என்று அம்மாவட்ட போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.