#BREAKING: நேர்முகத் தேர்வு – TNPSC முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழ்நாடு அரசில் உள்ள கட்டடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கான, நேர்முகத் தேர்வு வரும் 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெட்ரா மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்விற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் தேர்வாணையம் வலைத்தளம் www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்