#Breaking:தி.மலையில் கருணாநிதி சிலை வைக்க தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல் கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில்,வேங்கைக்கால் பகுதியில் அமைக்க கருணாநிதி விலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.அதே சமயம்,தமிழக அரசு,திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்,அமைச்சர் எ.வ.வேலு,ஜீவா கல்வி அறக்கட்டளை பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்