தகாத உறவு..! பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி ..!

Default Image

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு இவர் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதி வேலை செய்து வந்துள்ளார்.  இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பகவதியின் கணவன் முருகனுக்கு தெரிந்து பகவதியை கண்டித்துள்ளார்.
பின்னர் பகவதி ரமேஷ் பாபுவிடம் பேசாமலும் , வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல ரமேஷ்பாபு வேலைக்கு வந்துள்ளார். அப்போது பகவதி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷ் பாபுவை  துரத்தி சென்றுள்ளனர். அருகே உள்ள நன்செய் வயலில் ரமேஷ்பாபு ஓடிக்கொண்டிருக்கும்போது கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் கீழே விழுந்த ரமேஷ் பாபுவையும் , பகவதியும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமேஷ்பாபு இறந்துவிட்டார். ஆபத்தான நிலையில் பகவதிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்