ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு போலீஸ் காவல்!

Amstrong Murder

சென்னை : கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தங்களுடைய கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள்.

தற்பொழுது, இந்த கொலை வழக்கில் சரண்டர் ஆன 8 பேர் மற்றும் கைதான 3 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க, காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால், 5 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்