அகரம் அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட தொன்மையான சுடுமண் முத்திரை!

Archaeological excavations have uncovered an ancient clay seal at a depth of 256 cm.

அகரம் அகழாய்வில் 256 செ.மீ ஆழத்தில் தொன்மை வாய்ந்த சுடுமண் முத்திரை கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தொன்மையான சுடுமண் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இந்த சுடுமண்ணால் ஆன முத்திரை 256 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இந்த முத்திரையின்  தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல்பகுதி உட்குழிவுள்ள உருளை வடிவம் கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட மூன்று பிரிவுகளைக் கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்களுடன், அதன் நடுவே சில புள்ளிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கீழும் பக்கவாட்டிலும் தலைப் பகுதியிலும் சிறிது சேதமடைந்துள்ளதாகவும், இந்த முத்திரையின் தலைப்பகுதி நன்கு வழுவழுப்பாகவும், அடிப்பகுதி சொரசொரப்பாகவும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.