பயணிகள் சுங்கச்சாவடியை சூறையாடியதால் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி.!

Default Image
  • பரனூர் சுங்கச்சாவடியில்  அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
  • இதனால் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து  பாதிக்கப்பட்டதால் பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கினர்.

சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அமைத்து உள்ளது.இந்த சுங்கச்சாவடி வழியாக திருச்சி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது அந்த அரசு பேருந்து ஓட்டுநரையும் ,நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி வைத்து உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து  பாதித்ததால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றது.

பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கினர்.இதனால் வாகனங்களுக்கு கட்டண வசூல் வசூலிக்காமல் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.

சுங்கச்சாவடி தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் இந்த மோதல் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியரிடமும் , பயணிகள் சிலரிடம் போலீசார் விசாரணை நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்