மரத்தில் மோதிய கார்…. திருச்செந்தூருக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..!

accident

கரூர் : சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூளை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார்.

இதனையடுத்து, இன்று அதிகாலை சாமி வழிபாடு முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டி கோட்டை அருகே காரில் சென்று கொண்டு இருந்த நிலையில். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி இருந்தவர்களையும், இறந்தவர்களின் சடலங்களையும் மீட்டனர். காரில் 5 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் காரை ஓட்டிய கிருஷ்ணகுமார்(40), அவருடைய மகள் வருணா (10), மாமியார் இந்திராணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த கிருஷ்ணகுமாரின் மனைவி மோகனா, மகன் சுதர்சன் இருவரும் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்