கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ள சந்தையில் விற்ற 5 பேர் கைது…!

Default Image
  • கொரோனாவை தொடர்ந்து தற்போது பலரும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தடுப்பூசி மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சென்னை தாம்பரம் அருகே கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, ஹைலோ ஆப் என்கின்ற செயலியில், மளிகை பொருட்களை விற்பனை செய்வது போல வடிவமைத்து, அதில் கருப்புப்பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பதாக பதிவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, வண்டலூரை சேர்ந்த சரவணன், இரண்டு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருந்தக ஊழியர்கள், அறிவரசன், தம்பிதுரை,பணியாளர் விக்னேஷ் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் நிர்மல்குமார் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு மருந்து விநியோகம் செய்த நபரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்