புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் உயிரிழப்பு.!

Puducherry

புதுச்சேரி : ரெட்டியார் பாளையத்தில் கழிவறையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷ வாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால், கழிவறையில் மயங்கி விழுந்த மூதாட்டியை தூக்குவதற்கு சென்ற அவரது மகளும், பேத்தியும் அடுத்தடுத்த மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், 2 பேர் விஷவாயுத்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, விஷ வாயு தாக்கியதில் செந்தாமரை (80), காமாட்சி (55), மற்றும் சிறுமி செல்வராணி (15) உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்