தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் – தீயணைப்புத்துறை

Default Image

தமிழ்நாடு முழுவதும் நேற்று 280 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல். 

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிலையில், தமிழகத்தை  பொறுத்தவரையில்,காலை மாற்று மாலை என 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் தீபவளி கொண்டாடவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளியாக நேற்று 280 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் அளித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்