20 திருக்குறள் கூறுபவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல்…!

Default Image

20 திருக்குறள் கூறுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலும், சிறந்த கல்வி ஸ்லோகன் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இந்த பொருட்களின் விலையேற்றம் மக்களை பெரிதும் பார்த்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில், தனியார் கல்விக் குழுமம் ஒன்று மாணவர்களுக்கு சில போட்டிகளை நடத்தியுள்ளது.

அந்த போட்டிகளின் படி, 20 திருக்குறள் கூறுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலும், சிறந்த கல்வி ஸ்லோகன் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த குழுமம் செய்துள்ள செயல் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்