மக்களின் கவனத்திற்கு.! தமிழகத்தில் இன்றுடன் அவகாசம் நிறைவு.!

தமிழகத்தில், மின் கட்டணம் செலுத்த இன்று தான் கடைசிநாள் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், மின் கட்டணம் செலுத்த இன்று தான் கடைசிநாள் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற  மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 -ம் தேதி வரை(அதாவது இன்று வரை ) அவகாசம் கொடுப்பதாக தமிழக மின்சார வாரியம் கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து, இன்றுடன் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் முடிகிறது. சென்னைம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் என அறிவித்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.