நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ பொதுப்பிரிவு கலந்தாய்வு!

The public consultation for medical courses scheduled to be held in Chennai today has been postponed due to the Nivar storm.

இன்று சென்னையில் நடைபெறவிருந்த மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. நான்காம் தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் இன்று 24.11.2020 இல் நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெறவிருந்த பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை அதாவது 30 ஆம் தேதி நடைபெறும் என அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான அறிக்கை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.