நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் என கமல் கூறியுள்ளார்.
2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது இதன் மூலம் அரசு உதவி பெறக்கூடிய துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்பு 15 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் பல்வேறு மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் கோரிக்கையில் இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்னும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகம் தான் நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் எனவே ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையை பெற தெளிந்தால் நாமே தீர்வு, என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node