மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்
நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமேன நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவு.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமதுரை கிளை, சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை உத்தரவளித்துள்ளது.