உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடக்கம்..! தொழிலாளர்களின் நிலை என்ன..?

Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 13 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக உள்ள குழாயை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினமே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை சரி செய்து, அவர்களை மீட்கும் பணியில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் வெளியே வரும் வரை அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவை குழாய் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் கண்காணித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்