விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கு: விரைவில் கைது செய்யப்படும் விகாஸ் துபேயின் மனைவி.!

Vikas Dubey's wife Richa Dube, who used the SIM on a fake ID in the Vikas Dubai encounter case, may be arrested soon.

விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கில் போலி ஐடியில் சிம் பயன்படுத்திய விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதனையடுத்து விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையில் விகாஸ் துபேயின் மனைவி மற்றும் உறவினர்கள் போலி ஆவணங்களின் கீழ் சிம் வைத்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே மீது கான்பூர் காவல் நிலையம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்த போது, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ரிச்சா துபே மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் போலி ஐடியில் சிம் பயன்படுத்திய குற்றச்சாட்டில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே விரைவில் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கு: விரைவில் கைது செய்யப்படும் விகாஸ் துபேயின் மனைவி.!