உத்தரகாண்ட் சாலை விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிதி உதவி அறிவிப்பு!

The Prime Minister has announced financial assistance to the families of the 12 people killed and injured in the Uttarakhand road accident.

உத்தரகாண்ட் சாலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிதி உதவி அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 நிதி உதவியும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

unknown node