#Breaking : சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு 

Default Image

மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் 42533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1373 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.எனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் உள்ள ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இந்த நேரங்களில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு இடையில் 2020-2021 -ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மே 31 -ஆம் தேதி நடைபெற இருந்தது.இந்நிலையில் தான் தற்போது  யூபிஎஸ்சி  சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்விற்கான புதிய தேதியை மே  20-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்