Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Default Image

அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது.

தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் அக். 15ம் தேதி முதல் திரையரங்குகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மேலும் திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்கள் 50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்