ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்..! என்ன காரணம்..!

Default Image

மகாராஷ்டிராவில் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் ஐ.தி. நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  சமீபத்தில் அவர்களது தகப்பனார் இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்தனர்.

இரைட்டை சகோதரிகளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவர்களது தாயாரை அதுல் மருத்துவமனைக்கு காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது இரட்டை சகோதரிகளுக்கு அதுல் மீது காதல் ஏற்பட்டது.

 இதனையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றாலும் தண்டனைச் சட்டம் 494 வது பிரிவின் கீழ்  மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்