கும்ப மேளா நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் – தெலுங்கானா சுகாதாரத்துறை

The Telangana Health Department has asked those returning home after attending the Kumbh Mela event to isolate themselves at home for 14 days.

கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

இந்நிலையில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட 1,700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில், இதுவரை, 3.79 லட்சத்திற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,928 பேர் உயிரிழந்துள்ளனர்.