திடீரென ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் – நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்!

Default Image

மும்பை ரயில் நிலைய நடைமேடையில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்.

மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் அனைவரும் காத்திருந்த சமயத்தில், நடைமேடையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ரயில் வரும் சமயம் பார்த்து திடீரென தண்டவாளத்தை நோக்கி குதித்துள்ளார். அவரது அருகிலேயே வந்து கொண்டிருந்த காவலர் இதனை கண்டதும் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்தப் பெண்ணை தண்டவாளத்தின் மறுபக்கம் இழுத்து காப்பாற்றியுள்ளார்.

தற்கொலை செய்ய முயற்சித்த அந்த பெண் ஏதோ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ரயில் வரும் சமயம் பார்த்து பெண் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நொடிப்பொழுதில் காவலர் அந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்