வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

Default Image

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம்   இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற விசாரணையில் ,வங்கிக் கடன் தவணையை செலுத்த 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று மத்திய அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.பின் இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில்  நேற்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது.இந்நிலையில் நேற்று  முடிவு அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை இன்று ஒத்திவைப்பதாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்