ககன்யான் திட்டம் 2022ஆம் ஆண்டுதான்- இஸ்ரோ தலைவர் சிவன்

Default Image

ககன்யான் 2022ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு  4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும்  உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான  இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தது.ரஷ்யாவில் கொரோனா தடுப்பு  நடைமுறை இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் , இவர்களுக்கான  அடுத்த கட்டப் பயிற்சிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,ககன்யான் 2022-ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போதிய கால அவகாசம் உள்ளதால் இந்த திட்டம் தாமதம் அடையாது என்றும் ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்