இறந்த மகனை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை..! என்ன காரணம்…?

Default Image

ஆந்திராவில் மகனின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் அதிகப்படியான பணம் கேட்டதால், இருசக்கர வாகனத்தில் வைத்தே கொண்டு சென்ற தந்தை.

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெத்வேல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில், ரூயா என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து தனது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸை அணுகியுள்ளார். அவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிகப்படியான பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க இயலாததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனின் உடலை தனது உறவினர் ஒருவரின் பைக்கில் வைத்து 90 கிலோமீட்டர் எடுத்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் வைத்தே இறந்த மகனின் உடலை தந்தை சுமந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 0902 2025
TVK Leader vijay - Arani harish
Varun Chakaravarthy INDvENG
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win