பேருந்திற்கு உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ட்ரைவர்!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்திற்கு உள்ளேயே ட்ரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய கமலேஷ் எனும் பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்துக்கு உள்ளேயே கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாகவும், வீட்டில் உள்ள கடன் தொல்லை மற்றும் குறைந்த சம்பளம் காரணமாகவும் தான் பேருந்து ஓட்டுனர் கமலேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்