செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!

Default Image

சோசியல் மீடியாவில் செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கணவர் கைது.

பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் திருமணமாகி தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசோக்கின் மனைவி சுதீஷ் ஷைனி அதிகமாக செல்போனில் நோண்டிக்கொண்டே இருந்துள்ளார். சோசியல் மீடியாவில் அதிகமான தனது நேரத்தை செலவிட்டு கணவனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் தகராறும் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அசோக் தனது மனைவியின் செல்லை கேட்டுள்ளார்.

ஆனால், அவர் மனைவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அசோக் சந்தேகமடைந்த அசோக் கோடரியால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின் குளியலறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுதீஷ் ஷைனியை கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்